Sunday, March 16, 2014

கிருமிகளுக்கு டிஷ்ஷூம்!

     பொதுவாகவே,  நம் நாட்டில் கழிப்பறை சுத்தம் பற்றிய விழிப்பு உணர்வு குறைவு.  அதைப் பற்றி பெசறதும்கூட ஏதோ வேண்டாத விஷயமா நினைக்கிறாங்க.  ஆனா,  உணவுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ,  அந்த அளவுக்கு கழிப்பறை சுத்தத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கணும்.
    சென்னை, பி.எஸ்.சீனியர் செகண்டரி பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் த்ரவிதா,  வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் கழிப்பறையில் கிருமிகள் பரவாமல் தூய்மையாக இருக்க மிக எளிமையான வழிமுறை ஒன்றை உருவாக்கியிருக்கிறார்.
    அரை லிட்டர் பிளாஸ்டிக் பாட்டில் ஒன்றை எடுத்துக்கங்க.  கீழே இருந்து இரண்டு இன்ச் உயரத்தில் சின்னத் துளை ஒன்றைப் போடுங்க. அந்தப் பாட்டிலில் ஃபினாயில் நிரப்பி, டாய்லெட் ஃப்ளஷ் டாங்க் உள்ளே வைங்க.  ஒவ்வொரு முறையும் டாங்க் ஃப்ளஷ் ஆகும்போது, ஃபினாயில் பாட்டிலிலிருந்து டாங்க் உள்ளே கொஞ்சம் கொஞ்சமா விழும்.  பாட்டிலில் ஓட்டை போட்ட இடம்வரை டாங்க் நீர் நிரம்பினதும் பாட்டிலிலிருந்து ஃபினாயில் வெளியே வர்றது நின்னுடும்.
    அதே நேரம், ஒவ்வொரு முறையும் ஃபிளஷ் பண்ணும்போதும் கொஞ்சமாக ஃப்னாயில் கலந்த தண்ணீர் டாய்லெட்டில் வரும்.  எப்பவும் டாய்லெட் ஃபினாயில் வாசத்தோட இருக்கும்.  கிருமிகள் சேராது.  அது மட்டுமா?  இந்த அரை லிட்டர் பாட்டிலால், ஒவ்வொரு ஃபிளஷ்ஷுக்கும் அரை லிட்டர் தண்ணீர் மிச்சமாகும்.  எப்படின்னா... அரை லிட்டர் தண்ணீர் இருக்க வேண்டிய இடத்தை ஃபினாயில் பாட்டில் ஆக்கிரமிச்சுக்குதே.
-- அ.பார்வதி.   சுட்டி விகடன். 31-10-2013.
-- இதழ் உதவி :  P.K. ஸ்ரீபாலா,  பச்சூர் . காரைக்கால்.    

No comments: