Tuesday, May 13, 2014

' வைகைப் புயல் வடிவேலு '

" தமிழ்கூறும் நல்லுலகுக்கு ' வைகைப் புயல் வடிவேலு 'வின் அளப்பறிய உண்மையான சாதனை என்ன?"
" நம்முடைய உயிர் எழுத்துக்கள் 12 ல் அதிகம் பயன்படுத்தாத ஒரே எழுத்து ' ஔ '.  ஏனெனில், ' ஔ ' என்ற எழுத்தில் நம்மிடம் அதிகமான சொற்கள் இல்லை.  அதனால், அந்த எழுத்தை நாம் பன்னெடுங்காலமாக அதிகம் பயன்படுத்துவதே இல்லை.  அவ்வளவு ஏன்... திருவள்ளுவரே 1,330 குறள்களில், ' ஔ ' என்ற இந்த உயிர் எழுத்தை ஒரு முறைகூடப் பயன்படுத்தவில்லை.  அப்படியிருந்தும் இந்த 21 -ம் நூற்றாண்டில் ' ஔ 'க்கு வடிவேலுவின் தயவால் சாப விமோசனம் கிடைத்துவிட்டது.  ' ஔளளள...' என்று அவர் ஆரம்பித்துவைத்த இழுவை இன்று நண்டு சிண்டு முதல் பாட்டன் பூட்டன் வரை பயன்படுத்துகிறார்களே !"
-- மு.அழகரசன், சேலம்.
--  நானே கேள்வி... நானே பதில்!
-- ஆனந்த விகடன். 17- 4-2013.

1 comment:

Unknown said...

அதைக் கூட எழுதும் போது அவ்வ்.. என்றுதான் எழுதுகிறார்கள்.. அவ்வ்...