Friday, May 30, 2014

குட்டிமா தூங்குமா.

 நர்சரி பள்ளிக்கூடங்களில் பயிலும் 3 வயது முதல் 6 வயது வரையுள்ள குழந்தைகளை, மதிய உணவுக்குப் பிறகு சிறிது நேரம் தூங்கவைப்பதன் மூலம் அவர்களுடைய நினைவாற்றல் பெருகுகிறது என்று அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் பல்கலைக்கழக உளவியல் துறைப் பேராசிரியர்கள் ஆய்வில் கண்டுபிடிதுள்ளனர்.  தூக்கமின்றி படிக்கும் குழந்தைகளால் அதிகபட்சம் 65 சதவிகிதம்தான் படித்ததை நினைவுபடுத்த முடிகிறதாம்.
-- திசை எட்டும். கருத்துப் பேழை.
     அண்டர்டிகா கண்டத்தில் உள்ள வாஸ்டாக் பகுதியில் 1983 ஜூலை 21ம் தேதி மைனஸ் 89.2 டிகிரி செல்சியஸ் ( மைனஸ் 128.6 டிகிரி ஃபாரஹீட் )
குளிர் நிலவியது.  இதுதான் இத்துவரை பதிவான வெப்பநிலையிலேயே மிகக் குறைந்த அளவாகும்.
-- மீட்டர் பேசுது. பூச்செண்டு.
     மரங்கொத்திப் பறவையின் தலைப்பகுதியில் இருக்கும் காற்றுப் பை,  குஷன் போல் செயல்பட்டு தொத்தும்போது ஏற்படும் அதிர்வுகளைத் தாங்குகிறது.
கண்களின் மேல் உள்ள படலம்,  மரங்களைக் கொத்தும்போது தெறிக்கும் மரத்துகள்களில் இருந்து கண்களைப் பாதுகாக்கிறது.
-- ஜெரீ ஜெய்.மாயாபஜார்.
-- தி இந்து. செப்டம்பர் 25, 2013.

No comments: