Monday, May 5, 2014

நகரும் பிரமாண்டம்!

  கப்பல் என்றாலே பிரமாண்டம்தான்.  அதிலும் உலக மகா பிரமாண்ட கப்பல் எது தெரியுமா? ஒயாசிஸ் ஆஃப் தி சீஸ் .  ஃபின்லாந்தில் வடிவமைக்கப்பட்ட இந்தக் கப்பல் ராயல் கரீபியன் இண்டர்நேஷனல் நிறுவனத்துக்குச் சொந்தமானது.  2009 ஆம் ஆண்டில் அதிகாரபூர்வ பயணத்தைத் தொடங்கியது.  இந்தக் கப்பல் பற்றிய தகவல்கள் அனைத்தும் ஆச்சரியம் தருகின்றன.
*  எடை 2 லட்சத்து 25 ஆயிரம் டன்.
*  கப்பலுக்குள் 150 மைல் நீளத்திற்கு பைப்புகளை பயன்படுத்தியுள்ளனர்.
*  கப்பலில் பயன்படுத்தப்பட்ட மின் ஒயர்களின் நீளம் 3 ஆயிரத்து 300 மைல்.
*  ஒரே சமயத்தில் இந்தக் கப்பலில் 6,300 பேர் பயணிக்க முடியும்.
*  பதினாறு மாடிகள் கொண்ட இதில் 2 ஆயிரத்து 700 அறைகள் உள்ளன.
*  கப்பலுக்குள் 7 சிறிய நகரங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.  திறந்த வெளி அரங்கமும் உண்டு.
*  11 விடுதிகளும் 7 நீச்சல் குளங்களூம் உள்ளன.
*  குழந்தைகளுக்கான விளையாட்டுத் திடலும், கைப்பந்து, கோல்ஃப் மைதானங்களூம் இருக்கின்றன. இது கப்பலா இல்லை கடலான்ணு ஆச்சரியமா
   இருக்குதானே!?
-- கார்த்தி.  மாயாபஜார். குழந்தைகளின் குதூகல் உலகம்.  சிறப்புப் பகுதி.
--   ' தி இந்து 'நாளிதழ்  புதன்,. அக்டோபர் 9, 2013. 

No comments: