Thursday, May 22, 2014

கணிதம் கற்க எளியமுறை.

  கணிதப் பாடத்தை ஆர்வத்துடன் படிக்க எளிய வழிமுறைகள் மூலம் வழிகாட்டுகிறார் ஓய்வுபெற்ற ஆசிரியர் என், உமாதாணு.  இந்தப் பணியில் அவரது மனைவி கனகம் உறுதுணையாக இருக்கிறார்.
     எவ்வளவு பெரிய எண்ணாக இருந்தாலும், அதன் காரணிகளை எளிதாக கண்டுபிடிக்கும் முறையை உருவாக்கியிருக்கிறார்.  உதாரணத்திற்கு :
     இரு எண்களின் பெருக்குத் தொகை -480,  கூட்டுத்தொகை -1 என்று எடுத்துக்கொண்டால், இதன் காரணிகளைக் கண்டுபிடிக்க தற்போதைய கற்பிக்கும் முறையில் 8 முதல் 10 நிமிடங்கள் வரை ஆகும்.  ஆனால், தான் கண்டுபிடித்துள்ள முறையில் இரண்டே நிமிடங்களில் காரணிகளைக் கண்டுபிடிக்க முடியும் என்கிறார்.  அதாவது, பெரிய எண்ணை சிறிய எண்ணால் வகுக்க வேண்டும்.  அதேநேரத்தில் சிறிய எண்ணை அதே எண்ணால் பெருக்க வேண்டும்.  அப்படி செய்தால், எவ்வளவு பெரிய எண்ணாக இருந்தாலும் இரண்டே நிமிடங்களில் விடை கிடைத்துவிடும்.  இந்த புதிய எளியமுறைக்கு யூனூஷ் என்று பெயரிடப்பட்டுள்ளது.
-- டி.செல்வகுமார். பூச்செண்டு.
--    ' தி இந்து ' நாளிதழ்,  செவ்வாய் அக்டோபர் 15, 2013.

No comments: