Tuesday, May 6, 2014

துளி...துளி...

*  ஒரு நாளுக்கு எத்தனை மணி நேரம்னு கேட்டால் 24 மணி நேரம்னு சொல்வோம்.  உண்மையில் ஒரு நாள் என்பது 23 மணி, 56 நிமிடம், 4 நொடிகள்
   மட்டுமே.
*  விண்வெளியில் ஆக்ஸிஜன் இல்லாததால் அங்கே உயிர்வாழ முடியாதுன்னு உங்களுக்குத் தெரியும்.  ஆனால், விண்வெளியில் உயிர் காக்கும்
   உபகரணங்கள் இன்றி 2 நிமிடங்கள் வாழ முடியும்.
*  காந்தியடிகள் விமானத்தில் பயணம் செய்ததே இல்லை.  பிரிட்டனுக்கும், தென் ஆப்பிரிக்காவுக்கும் கப்பலில்தான் பயணித்திருக்கிறார்.
*  ஊர் பெயர்களை மனிதர்களுக்கு வைப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறோம்.  ஆனால், அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் உள்ள ஒரு நகரத்துக்கு
   விலங்கின் பெயரைச் சூட்டியிருக்கிறார்கள்.  அந்த ஊரின் பெயரைக் கேட்டாலே சும்மா அதிருதாம்.  அப்படி என்ன பெயரா?  டை நோசர்!
*  நாலா பக்கமும் கையை, காலை நீட்டிக்கிட்டு அவ்ளோ பெருசா இருக்கிற ஆக்டோபஸ் ,  பிறக்கும்போது ஒரு ஈ அளவில்தான் இருக்கும்.
*  பாலைவனம்னாலே கண்ணுக்கு எட்டின தூரம் வரைக்கும் மணல்தானே இருக்கும்.  ஆனால், பெரு நாட்டில் உள்ள செக்கரா பாலைவனத்தில் மணலே
   இல்லை.  மலை மேடு போலவே காட்சியளிக்கும்.
-- டி.கே.   மாயாபஜார். குழந்தைகளின் குதூகல் உலகம்.  சிறப்புப் பகுதி.
--   ' தி இந்து 'நாளிதழ்  புதன்,. அக்டோபர் 9, 2013.  

No comments: