Saturday, April 23, 2016

புரியாத பூக்கள்

  ஒரு விண்வெளி அதிசயம் ஜப்பானில் நடந்துள்ளது.  சில ஆண்டுகளுக்கு முன் ஜப்பான் விண்வெளி வீரர்கள், தங்களுடன் வான்வெளிக்கு செர்ரிப் பழ விதைகளையும் எடுத்துச் சென்றனர்.  வான்வெளியில் உள்ள சர்வதேச ஆய்வு நிலையத்தில் அந்த விதைகள் 8 மாதங்கள் இருந்தன.  பின்னர் அவற்றை ஜப்பானுக்கு கொண்டு வந்து ஒரு தோட்டத்தில் நட்டனர்.  செர்ரிப் பொதுவாக 10 ஆண்டுகளுக்கு பிறகு தான் பூக்கத்தொடங்கும்.  ஆனால் வான்வெளிக்குச் சென்று திரும்பிய இந்த செர்ரி விதைகள் மூலம் வளர்ந்த மரங்கள், 4 ஆண்டுகளிலேயே பூக்கத்தொடங்கி விட்டன.  இதுவும் வான்வெளி ஆராய்ச்சி நிபுணர்களுக்குப் புரியாத புதிராக இருந்துவருகிறது.
-- விந்தை உலகம்.  வாழ்வு இனிது.
-- 'தி இந்து' நாளிதழ். சனி, ஏப்ரல் 19, 2014.   

No comments: