Tuesday, November 10, 2015

தெரியுமா உங்களுக்கு !

  திருமலையில் மாதந்தோறும் முதலாவது வெள்ளிக்கிழமை 'டயல் யுவர் இ.ஓ' எனும் குறைகேட்பு நிகழ்ச்சி நடைபெற்று
   வருகிறது.  இதில் பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த பக்தர்கள் தொலபேசி மூலம் கூறும் குறைகள் கேட்கப்பட்டு, அவற்றில் சில
   நிறைவேற்றப்பட்டு வருகிறது.  இதில் ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீநிவாஸ் என்கிற பக்தர்
   தொடர்பு கொண்டு,' சுவாமி தரிசனத்துக்காக பல மணி நேரம் வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள், தமது கைக்குழந்தைகள்
   பாலுக்காக அழும்போது செய்வதறியாது தவிக்கின்றனர். இதற்கு தேவஸ்தானம் நடவடிக்கை எடுக்க வேண்டும்'  என
   கோரிக்கை விடுத்தார்.  'இந்த கோரிக்கை மிகவும் நியாயமானது.  இனி வரிசையில் காத்திருக்கும் பக்தர்களின் கைக்குழந்தை
   களுக்கு தடையின்றி 24 மணி நேரமும் பால் விநினியோகம் செய்யப்படும் என்று அதிகாரி கோபால் தெரிவித்தார்.
-- தினமலர்  நாளிதழ், 

No comments: