Saturday, November 14, 2015

அப்படியா...?

*  வயிற்றிலுள்ள அமிலத்திலிருந்து வாயு பிரிந்து ஏப்பம் வருமளவுக்கு ஈர்ப்புவிசை இல்லாததால் விண்வெளி வீரர்களால் ஏப்பம்
   விட முடியாது.
*  ATM மிஷினை உருவாக்கிய ஜான் ஷெப்பர்ட் பேரோன், தன் மனைவியால் 6 இலக்க ரகசிய எண்ணை நினைவில் வைக்க
   முடியாததால், அதை 4 இலக்க எண்ணாக மாற்றினார்.
*  வழுதுணங்காய் என்பது கத்தரிக்காயின் பழந்தமிழ்ப் பெயர்.
*  இந்திய நாளிதழ்களிலேயே முதன் முறையாகக் கேலிச்சித்திரம் ( கார்ட்டூன் ) வெளியிட்டவர் நம்ம மகாகவி பாரதியார் தான்!
   சுதேசமித்திரனில்!!
*  இன்றும் தாய்லாந்தில் மன்னர் முடிசூட்டலின் போது, திருவெம்பாவை பாடப்படுகிறது!
*  விமானத்திலிருந்து பார்க்கும் பயணிக்கு வானவில் வட்ட வடிவமாகத் தெரியும்!
*  ஆசியாவிலுள்ள 47 நாடுகளில் இந்தியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் மட்டுமே ஆங்கிலம் ஆட்சி
   மொழிகளில் ஒன்றாக இருக்கிறது !
*  உலக மக்கள் தொகையை 100 பேர் இருக்கும் கிராமமாகக் கொண்டால், அதில் 57 ஆசியர்கள்,21ஐரோப்பியர்கள், 14
   அமெரிக்கர்கள், 8 ஆப்பிரிக்கர்களும் இருப்பார்கள்.
--     தமிழ் பேக்ட்ஸ்.  சண்டே ஸ்பெஷல்.
-- தினமலர். நாளிதழ். 16-2-2014.  

No comments: