Monday, November 2, 2015

தானியங்கி கிளீனர்

  வீட்டை  பெருக்க, சுத்தம்  செய்யும் வேலைகளை  எளிதாக  செய்ய  வேக்குவம்  கிளினர்  இயந்திரங்களைப்  பயன்படுத்துகிறோம்.  ஆனால்  இந்த  இயந்திரத்தை  இயக்கவும்  ஒரு  ஆள்  தேவையாகத்தான்  இருக்கிறது.
   தற்போது  இதையும்  எளிமையாக்கியுள்ளது  ஐபோபாட்  என்கிற  கருவி.  மொபைல்  ஆப்ஸ்  மூலம்  இயக்கப்படும்  இந்த  கருவி  தானாகவே  அறையை  சுத்தம்  செய்கிறது.
   360  டிகிரி  சுழலும்  இந்த  கருவியிலுள்ள  சென்சார்கள்  வீட்டின்  வளைவுகளுக்கு  ஏற்ப  சுற்றி  வருகிறது.  எத்தனை  மணிக்கு  சுத்தம்  செய்ய  வேண்டும்  என  ஆப்ஸில்  பதிவு  செய்துவிட்டால்  தானாகவே  சுத்தம்  செய்துவிட்டு  அதற்குரிய  இடத்தில்  செட்டில்  ஆகிவிடும்.
கைகளே  கீபோர்டு
   கீபோர்டு  மற்றும்  மவுசுக்கு  பதிலாக  கையில்  சில  ஒயர்களை  மாட்டிக்கொண்டு  கம்ப்யூட்டரை  இயக்கலாம்.  இப்படியான  ஒரு  கருவியை  ஜெஸ்ட்  என்கிற  நிறுவனம்  வடிவமைத்துள்ளது.
   ஒயர்களைப்  போல  உள்ள  இந்தக்  கருவியை  கையில்  அணிந்து  கொண்டு  கம்ப்யூட்டரின்  மானிட்டரை  பார்த்து  கை  அசைத்தால்  மவுசாக  இயக்கலாம்.  திரையில்  தெரியும்  கீ  போர்டு  எழுத்துகளை  கையை  அசைப்பதன்  மூலமே  டைப்  செய்யலாம்.  மோஷன்  பிராசசர்  மூலம்  இந்தக்  கருவி  செயல்படுகிறது.
   போட்டோஷாப்  மற்றும்  3டி  வேலைகள்  உட்பட  பல  வசதிகளை  இந்த  கருவி  மூலம்  மேற்கொள்ள  முடியும்.
---'தி இந்து' நாளிதழ். வணிக வீதி  இணைப்பு. திங்கள்,   நவம்பர், 2, 2015.   

No comments: