Saturday, November 28, 2015

மிருகம் விரட்டுங்கள்!

  மனிதனுக்கு மிகப்பெரிய எதிரி கோபம்.  அதை தவிர்த்தாலே நினைத்ததை சாதிக்கலாம்.  சிடுமூஞ்சியானாலும் கோபத்தை
தவிர்க்க வழியுண்டு.  இதோ...
1.  தொடர்ந்து இயற்கை உணவுகளை சாப்பிட்டுப் பழகலாம்.
2.  தியானம், சாந்தி ஆசனம் செய்யலாம்.
3.  ஒன்று முதல் 10 வரை எண்ணலாம்.
4.  தண்ணீர் குடிக்கலாம்.
5.  கோபத்துக்கான காரணத்தை ஒரு பேப்பரில் வரிசையாகப் பட்டியலிட்டு எழுதலாம்.
6.  பழச்சாறுகள், இயற்கை உணவுச் சாறுகள் குடிக்கலாம்.
7.  கோபம் வரும்போது முகம் விகாரமாகி, அன்பு, சாந்தம் குறைவதை கண்ணாடியில் பார்க்கலாம்.
8.  கோபத்துக்குக் காரணமான சொல், செயல், எண்ணத்தை மாற்றலாம்.
9.  கோபப்படும் இடம், நபரிடம் இருந்து விலகிச் செல்லலாம்.
10. நீர்வீழ்ச்சியில், ஷவரில், தொட்டியில் குளிக்கலாம்.
11. கோபத்தை இறைவனிடம் சமர்ப்பிக்கலாம்.
     இவற்றை கடைபிடித்தால் எவ்வளவு பெரிய கோபக்காரரும் சாந்த சொரூபியாகி விடுவார்.  அப்புறம் என்ன?  கோப உணர்ச்சிகளால் ரத்த அழுத்தம், கண் சிவப்பு, அமில சுரப்பு, வயிற்றுப்புண் போன்ற நோய்களும், மிருக குணமும் நம்மை விட்டு ஓடிப்போய் விடும்.
-- சண்டே ஸ்பெஷல்.
-- தினமலர். நாளிதழ். 23-2-2014. 

No comments: