Thursday, November 19, 2015

திட்டமிட்டு மறைத்த உண்மை?

  வரலாற்றில் மறைக்கப்பட்ட இசுலாமியர்களின் தியாகங்கள்.  கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளைக்கு கப்பல் வாங்க அந்த காலத்திலேயே 2 இலட்சம் கொடுத்த தொழிலதிபர் திரு. பக்கீர் முகம்மது இராவுத்தர் என்ற தமிழரை நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?  அதை போல வ.உ.சி .யின் கப்பல் நிறுவனம் நட்டத்தில் இயங்கிய போது, வ.உ.சி. அவர்களுக்கு யாகூப் சேட் , உமர் கத்தாப், இப்ரஹீம் செய்யது இராவுத்தர், அகமது சாகிப், முகமது சுலைமான் ஆகியோர் தொடர்ந்து பல இலட்சங்களை வாரி வழங்கினர்.  வ.உ.சிதம்பரனார் அவர்கள் 1912 இல் வறுமையில் வாடியபோது, அவருக்கு உதவிகளைச் செய்து மகழ்ந்தவர் அகமது மீரான் என்பவராவார்.  வ.உ.சி.யின் விடுதலைக்காக வாதாடியவர் இசுலாமிய வழக்கறிஞர்... அன்று இந்திய சுதந்திரதிற்காக தங்களின் எண்ணிக்கையைவிட அதிகமாக போராடிய பொருளாலும், உடலாலும் தியாகம் செய்த இசுலாமிய சமூகத்தின் வரலாறு அனைத்தும் பார்ப்பனீயத்தாலும் திராவிடத்தாலும் திட்டமிட்டு மறைக்கப்பட்டு வந்தது என்பதே உண்மை.
---  மூத்த குடி. அரசியல் மாத இதழ்.  திசம்பர் 2013.
-- இதழ் உதவி : செல்லூர் கண்ணன்.   

No comments: