Friday, March 11, 2016

இதையும் தெரிஞ்சுக்கோங்க...

*  ஏ.சி.யில் இருந்து அமோனியா வாயு கசிந்து அறை முழுவதும் பரவியதால், தூங்கிக்கொண்டிருந்த தொழில் அதிபர் பரிதாபமாக
    உயிரிழந்தார்.
*  ஏ.சி. பயன்படுத்துவோரின் கவனத்துக்கு :  "காற்றைக் குளிர்ச்சிப் படுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ள சிலிண்டரில்
    இருந்துதான் அமோனியா வாயு கசியும்.  ஏ.சி.யை சரியாக பராமரிக்காமல் விட்டால் மட்டுமே இந்த பிரச்சினை ஏற்படும்.
    சரியான கால இடைவெளியில் அதை சர்வீஸ் செய்தால் 90 % பிரச்சினைகள் ஏற்படாது.
*  ரப்பர், காகிதத்தைவிட அதிக ஒட்டும் தன்மை கொண்டது.  அதனால்தான் காகிதத்தில் ரப்பரை வைத்துத் தேய்கும்போது,
   காகிதத்தில் ஒட்டியிருக்கும் கிராஃபைட் ( பென்சில் மினை கிராஃபைட்டால்தான் செய்யப்படுகிறது), ரப்பரில்
   ஒட்டிக்கொள்கிறது.  அதனால் அந்த இடத்தில் எழுத்து அழிந்து, சுத்தமாகிவிடுகிறது.
*  ஆண்டு தோறும் ஏப்ரல் 12-ம் தேதி, உலக விண்வெளி வீரர்கள் தினம் ஆக உலகம் முழுக்க அனுசரிக்கப்படுகிறது.
*  நபிகள்னாயகம் குரானில் எத்தனை வசனங்களை இயற்றினார்?  --   6,666 வசனங்களும், 114 அத்தியாயங்களும் உள்ளன.
--- 'தி இந்து' நாளிதழ்களில் இருந்து...

No comments: