Saturday, March 12, 2016

அயோடின் உப்பு.

   'உப்பு...உப்பேய்' என கூவிக் கூவி விற்கப்பட்ட உப்பை நாம் ஒழித்தாயிற்று.  இன்றளவும் சர்ச்சைக்குரிய அயோடினைக் கலந்த உப்பு மட்டும்தான் சட்டப்படி சந்தையில் இருக்க முடியும்.  அந்த நவீன உப்பைத் தயாரிக்கும் முறையைப் பார்த்தால் தலை சுற்றுகிறது.
     உப்பளத்தில் காய்ந்து பெற்ற கடல் உப்பைக் கழுவி, அரைத்து, குழம்பாக்கி, தூசிகள்(?) நீக்கி, 'வேக்கும் ரிஃபைனரி' மூலம் இயல்பாகவே கடல் உப்பில் ஒட்டியிருக்கும் மக்னீசிய,கால்சிய கனிமங்கள், கடல் பாசியின்                                                    நுண்கனிமங்களை நீக்கி, பின் காயவைத்து உலர்த்தி, அயோடினைச் சேர்த்து, மறுபடி பொலபொலவென உதிர்ந்து விழ, உணவுக் கட்டுப்பாடு விதிகளை அங்கீகரித்து சேர்க்கப்படும் ரசாயனங்களான சோடியம் ஃபெர்ரோசயனைட் , அல்லது மெக்னீசியம் சல்பேட் முதலான பல கூறுகளில் சிலவற்றைச் சேர்த்து பளபளப்பாகப் புட்டியில் வரும் வெள்ளை வெளேர் உப்பு.  சுத்தம் தரலாம், சுகம் தருமா?
--  மருத்துவர் கு.சிவராமன்.   ( 'ஆறாம் திணை' தொடரில் )
-- ஆனந்த விகடன்.  22-01-2014.    

No comments: