Tuesday, March 15, 2016

ராம நாமம் !

  ராம நாமத்தை மந்திர அட்சரங்களாகப் பிரித்தால் ர, அ, ம என்ற மூன்று அட்சரங்களாகும்.  ர என்பது அக்னி பீஜம்.  அ என்பது சூர்ய பீஜம்.  ம என்பது சந்திர பீஜம்.  அக்னி பீஜம் பாவங்களைப் போக்கும்,  சூர்ய பீஜம் ஞானம் அளிக்கும்,  சந்திர பீஜம் மனத்துயர் போக்கும்.  மனத்துயரை நீக்கி பாவங்கள் போக்கி ஞானம் அளிப்பது ராம நாமம் என்பது இதன் உட்பொருள்.
பஞ்ச பிரம்ம தலங்கள் !
     நடுவே மூலஸ்தானமும், நான்கு பக்கங்களிலும் நான்கு லிங்கங்களும் அமையப் பெற்ற திருத்தலம் பஞ்ச பிரம்ம ஸ்தலம் எனப்படும்.  அந்த அமைப்பு உள்ள திருப்புகலூர், திருவாரூர், மாகாளம் ஆகியன பஞ்ச பிரம்ம தலங்களாக விளங்குகின்றன.
யோக பீடங்கள் !
     அகத்தியர் தவம் புரிந்த இடங்களுள் பாபநாசத்தினை யோக பீடம் என்றும்,  குற்றாலத்தை போக பீடமெனவும்,  சிவசைலத்தினை ஞான பீடமாகவும் சொல்வர்.  இம்மூன்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்லன.
பிரதோஷ கணபதி !
     காரைக்கால் அருகே உள்ள திருதெளிசேரி, பார்வதீஸ்வரர் ஆலயத்தில் உள்ள பிள்ளையார், பிரதோஷ விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.  திங்கட் கிழமைகளில் மாலைவேளையில் இவரை வணங்குவது சிறப்பான பலன் தரும்.
-- குமுதம் பக்தி ஸ்பெஷல்.  ஏப்ரல் 1 - 15,  2014.

No comments: