Tuesday, March 22, 2016

தன்வந்திரி பகவான்

  பாற்கடல் கடையப்பட்ட சமயத்தில் அதுலேர்ந்து அமுத கலசத்தை எடுத்துகிட்டு வெளிப்பட்டவர்தான் தன்வந்திரி பகவான்.  ஒரு கையில அமுதம் நிரம்பிய கலசம் எடுத்துக்கிட்டு வந்த இவர், தன்னோட மற்ற மூன்று கைகள்ல மருந்துக் கல்வம், மூலிகைச் செடிகள், அட்டைப்பூச்சி இவற்றை ஏந்திவந்தாராம்.  மகாலட்சுமி, தன்வந்திரி, சந்திரன் மூணுபேரும் பாற்லடல்ல இருந்து தோன்றியவங்க.
கதவு இல்லாத ஊர் !
     மகாராஷ்டிரா மாநிலம் அகமதுநகர் மாவட்டத்தில் சனிசிங்கணாபூர் என்னும் கிராமத்தில் புகழ்பெற்ற சனீஸ்வரன் கோயில் உள்ளது.  அந்தக் கோயிலுக்கும், அவ்வூரில் உள்ள வீடுகள் அனைத்திற்கும் கதவுகள் கிடையாது.  வீடு திறந்தே இருந்தாலும் அங்கு திருட்டு எதுவும் நடைபெறுவதில்லை.  சக்தி வாய்ந்த சனீஸ்வர பகவான், திருடனை கடுமையாகத் தண்டிப்பார் என்று அங்கு வாழும் மக்கள் நம்புகிறார்கள்.
அரசமர பிரதட்சணம்!
     நமக்கு ஏற்படும் நோய்கள், துன்பங்கள், நவகிரக பாதிப்புகள் எல்லாவற்றையும் அசுவத்த பிரதட்சணம் ( அரசமரத்தை வலம் வருதல் ) போக்குகிறது.
_  குமுதம் பக்தி ஸ்பெஷல். மார்ச் 15 - 31,  2014. 

No comments: