Wednesday, March 16, 2016

தேவியர் மூவர் !

   காசி விசாலாட்சி, திருக்கடவூர் அபிராமி, திருவையாறு அறம்வளர்த்த நாயகி மூன்று தேவியருக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  இந்த மூவரும் வலக்கையில் அக்க மாலையும்,  இடக்கரத்தில் கெண்டியும்தாங்கி வித்தியாசமான கோலத்தில் காட்சி தருகின்றனர்.
கிணற்றில் கங்கை !
     திருக்கடவூர் ஆலயத் திருக்கிணற்றில் பங்குனி மாத அசுவினி நட்சத்திர நாளில் கங்கை ஆவிர்பவித்ததாக ஐதீகம்.  அன்றைய தினம் மார்க்கண்டேயர் தீத்தவாரி கண்டருள்வார்.  இந்த தீர்த்தமே திருக்கடவூர் இறைவனுக்குரிய அபிஷேக தீர்த்தம் என்பது சிறப்பு.
வித்தியாசமான கோலம் !
     காவிரி வடகரைத் திருத்தலங்களுள் ஒன்றான திருநெய்த்தானத்தில் தட்சிணாமூர்த்தி நின்ற கோலத்தில் காட்சியளிப்பது வித்தியாசமான தோற்றமாகும்.
பிரயாகை புண்ணியம் !
     அரசமரத்தின் நிழல்படும் நீர்நிலைகளில் அமாவாசை தினங்களிலும் வியாழக்கிழமைகளிலும் நீராடுவது, பிரயாகையில் நீராடிய பலனைத் தரும் எங்கின்றன புராணங்கள்.
---  குமுதம் பக்தி ஸ்பெஷல்.  ஏப்ரல் 1 - 15,  2014. 

No comments: