Saturday, March 19, 2016

பிரஸ்தானத்ரயம்.

   இந்து சமயத்தின் அடிப்படை நூல்கள் எவை?  மூன்று நூல்களை அடிப்படையான நூல்கள் என்று கொள்ளும் மரபு இந்து தத்துவ இயலில் உள்ளது.  இவற்றை பிரமாணமான, அதாவது ஆதாரமான நூல்கலாகக் கொள்ளலாம்.  பிரஸ்தானத்ரயம் என்று இவை அழைக்கப்படுகின்றன.  ஆதாரமான மூன்று பிரதிகள் என்று பொருள் கொள்ளலாம்.
     பாதராயணர் அல்லது வியாசர் எழுதிய பிரம்ம சூத்திரம், உபநிஷதங்கள், பகவத் கீதை ஆகியவையே அந்த மூன்று நூல்கள்.  இவற்ரில் உபநிஷதம் என்பது ஒரு நூல் அல்ல.  முக்கியமான உபநிஷதங்கள் என்று 14 உபநிஷதங்களை வகைப்படுத்தி இருக்கிறார்கள்.  சங்கரர்,ராமானுஜர், மத்வர் ஆகிய மூன்று ஆசாரியர்களும் இந்த நூல்களுக்குத் தத்தமது பார்வையின் அடிப்படையில் உரை எழுதியிருகிறார்கள்.
-- நசிகேதன்.  தத்துவ விசாரம்.  ஆனந்த ஜோதி.
-- 'தி இந்து' நாளிதழ். வியாழன், ஏப்ரல் 10, 2014.  

No comments: