Wednesday, May 10, 2017

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

1.   அப்புத்தலம்  எனக்  குறிப்பிடுவது... திருச்சி  அருகிலுள்ள  திருவானைக்காவல் ( அப்பு  என்றால் தண்ணீர் ).
2.   பூலோக  கைலாயம்  என  சிறப்பிக்கப்படும்  தலம்... சிதம்பரம்.
3.   ஜடாயு  சிவனை  பூஜிக்கும்  பேறு  பெற்ற  தலம்... வைத்தீஸ்வரன் கோயில்.
4.   சங்க  காலத்தில் 'மாயோன்'  என  குறிக்கப்பட்டவர்... திருமால்.
5.   திவ்ய  பிரபந்தத்தில்  நீளாதேவியைப்  பாடிய  ஆழ்வார் ... திருமங்கையாழ்வார்.
6.   கடவுளை  அடி  முதல்  முடி  வரை  பாடுவது ... பாதாதி கேச வர்ணனை.
7.   அரியர்த்தர்  என்று  குறிப்பிடப்படுபவர் ... சங்கர நாராயணர்.
8.   ஆதிசங்கரர்  சிவானந்த லஹரியை  இயற்றிய  தலம் ... ஸ்ரீசைலம்.
9.   காசி  என்பதன்  பொருள் ... பிரகாசம்  அல்லது  ஒளி.
10. காளிதாசர்  எழுதிய  முதல்  நூள் ... சியாமளா தண்டகம்.
-- அர்ச்சனைப்பூக்கள்.  பக்திமாலை.
-- தினமலர் ஆன்மிக மலர்.  சென்னை. ஆகஸ்ட்  19, 2014.
-- இதழ் உதவி : SB. மாதவன்.  விருகம்பாக்கம் .  சென்னை 92. 

No comments: