Saturday, May 13, 2017

கவிழும் 'இலை'

  வீட்டிலேயே  தோட்டம்  உள்ளவர்கள்,  பூஜைக்குரிய  பூக்களைப்  பறித்து  சுத்தமான  கூடையில்  போட  வேண்டும்.  புடவைத்  தலைப்பில்  போடக்கூடாது.  பூக்களை  சுவாமியின்  பாதத்தில்  போடும்  போது, காம்பு  கீழேயும்  பூவிதழ்  மேலாகவும்  இருக்குமாறு  போட்டுவதே  முறையானது.  பூ  மட்டுமலாமல்  இலை,  பழம்  இவற்றிற்கும்  இது  பொருந்த்ம்.
    "புஷ்பம்  பத்ரம்  பலம்  சைவ  யதோத்பன்னம்  ததார்ப்பயேத்"
என்கிறது  சாஸ்திரம்.  அதாவது,  பூக்கள்,  இலைகள்,  கனிகள்  அனைத்தையும்  மேல்நோக்கி  படைக்க  வேண்டும்  என்பது  இதன்  பொருள்.  ஒரே  ஒரு  இலைக்கு  மட்டும்  விதிவிலக்கு  உண்டு.  வில்வ  இலையால்  சிவனை  அர்ச்சிக்கும்போது  தலைகீழாக  கவிழ்ந்து  இருக்குமாறு  அர்ச்சிப்பது  சிறப்பு.
பூஜைக்குரிய  திசை
     விநாயகர்,  முருகன்,  சிவன்,  விஷ்ணு,  சூரியன்  ஆகிய  தெய்வங்களை  வணங்கும்போது  சுவாமியை  கிழக்கு  நோக்கி  வைத்து,  நாம்  வடக்கு  நோக்கி  அமர்ந்து  பூஜை  செய்வதே  சிறந்தது.  பெண்  தெய்வங்களான  காளி,  மாரி,  லட்சுமி,  பிற  அம்மன்களை  வழிபடும்போது  நேருக்கு  நேராக  அமர்ந்து  பூஜை  செய்யலாம்.  அதாவது, அம்மன்  கிழக்கு       நோக்கி  இருக்க,  நாம்  மேற்கு  நோக்கியோ  அல்லது  அம்மன்  வடக்கு  நோக்கி  இருக்க,  நாம்  தெற்கு  நோக்கியோ  பூஜை  செய்யலாம்.
--  தினமலர் ஆன்மிக மலர்.  சென்னை. ஆகஸ்ட்  19, 2014.
-- இதழ் உதவி : SB. மாதவன்.  விருகம்பாக்கம் .  சென்னை 92. 

No comments: