Friday, May 26, 2017

தத்துவம்... பித்துவம்!

*  கொதிக்கற  தண்ணியில  பிம்பம்  தெரியாது.
    அப்படித்தான்  குழம்பிக்  கிடக்கற  மனசுக்கும்  உண்மை  புரியாது.
    தெளிஞ்சுட்டு  முடிவெடு  மச்சி!
     --- இனியா
புலம்பல்  நம்பர்  ஒன்!
*  நாம  பதினஞ்சு  மார்க்  கேள்விக்கு  பிட்  எழுதிட்டுப்  போயிருப்போம்.  ஆனா,  அதையே  அஞ்சு  மார்க்  கேள்வியா  அவங்க
   மாத்திக்  கேட்டிருப்பாங்க.  அப்ப  வரும்  பாரு  ஒரு  கடுப்பு... அதுக்குப்  பேருதாண்டா  யூனிவர்சல்  வெறுப்பு!
   -- சுஜாதா.
சிந்தனைத்  துளி!
*  கடவுளுக்கும்  டாக்டருக்கும்  கோபம்  வர்றபடி  எப்பவும்  நடந்துக்கக்  கூடாது.
   ஏன்னா...
   கடவுளுக்குக்  கோபம்  வந்தா... டாக்டர்கிட்ட  அனுப்புவார்.
   டாக்டருக்கு  கோபம்  வந்தா  கடவுள்கிட்டேயே  அனுப்பிச்சுடுவார்!
  -- மகேஸ்வரி
மாங்காய்  முடிவு!
* "உலகம்  அடுத்த  வருஷம்  அழியப்  போகுதடா...!"
  "எப்படிடா  சொல்ர...?"
  "மாங்காய்  ஊறுகாய்  பாட்டில்லகூட  போட்டு  இருக்காங்கடா... எக்ஸ்பயரி  டேட்  2012  டிசம்பர்னு!"
   -- ஆஷா  சமீர்
-- அவள் விகடன்.  6-5-2011.

No comments: