Wednesday, May 31, 2017

சோடசோபசாரம்.

உபசாரம்  பதினாறு.
     ஆலயங்களில்  இறைவனுக்கு சோடசோபசாரம் என்னும்  உபசாரம்,  பதினாறு  விதமாகச்  செய்யப்படுகின்றன.
     தவிசு  அளித்தல்,  கைகழுவ  நீர்  தருதல்,  கால்  கழுவ  நீர்  தருதல்,  மூக்குடி  நீர்  தருதல்,  நீராட்டல்,  ஆடைசாத்தல்,  முப்புரி  நூல்  தருதல்,  தேய்வைபூசல்,  மலர்சாத்தல்,  மஞ்சள்  அரிசி  தூவுதல்,  நறும்புகை  காட்டல்,  விளக்கிடல்,  கற்பூரம்  ஏற்றல்,  அமுதம்  ஏந்தல்,  அடைக்காய்தருதல்,  மந்திரமலரால்  அர்ச்சித்தல்  முதலியன.
திருவலஞ்சுழி  விநாயகர்
     திருவலஞ்சுழியிலுள்ள  விநாயகர்  கடல்  நுரையால்  செய்யப்பட்டவரதலால்  அவருக்கு  பச்சைக்கற்பூரம்  தூவுவதைத்  தவிர  வேறு  அபிஷேகம்  கிடையாது.
திருநாகேஸ்வரம்
     திருநாகேஸ்வரம்  கோயிலில்  சுயம்பு  வடிவிலுள்ள  பார்வதி,  சரஸ்வதி,  லட்சுமி  மூவருக்கும்  டைலக்  காப்பு  மட்டுமே
சாத்தப்படுகிறது.                                                            
-- ( பக்தி  துணுக்குகள் )
-- தினமலர் பக்திமலர்.  15-1- 2015. 

No comments: