Monday, May 15, 2017

தகவல் பலகை

*   கங்காரு  குட்டிகள்  பிறக்கும்போது  2.5  சென்டி மீட்டர்தான்  இருக்கும்.  அந்த  குட்டிகளுக்கு 'ஜோய்ல்ஸ்'  என்று  பெயர்.
*   நமது  நாட்டில்  1937ம்  ஆண்டு 'ஆல்  இந்தியா  ரேடியோ'  என்ற  பெயரில்  வானொலி  ஒலிபரப்பு  தொடங்கப்பட்டது.  1957ம்
    ஆண்டு  அக்டோபர்  1ம்  தேதி  விவிதபாரதி  தொடங்கப்பட்டது.
*   வேறு  நீரில்  குளித்துச்  சுத்தமான  பிறகே,  கோயில்  குளத்தில்  நீராட  வேண்டும்  என்பது  நியதி.
*   ப்ராவக்  வம்சம்  என்பது  யாகம்  செய்யும்  கர்த்தாவும்  அவர்  மனைவியும்  தங்கும்  இடம்.  இது  யக்ஞ  வாடிகைக்குக்  கிழக்கு
    திசையில்  அமைக்கப்பட்டிருக்கும்.
*   வாரணாசி,  காசி,  பெனாரஸ்  என்ற  நகரத்தில்  80-க்கும்  மேலான  காட்  என்று  அழைக்கப்படும்  படித்துறைகள்
    இருக்கின்றன.
*  ஒவ்வொரு  படித்துறையிலும்  குறைந்தது  80  படிகள்.  அஸ்லி  காட்டிலிருந்து  80-க்கும்  மேலான  படித்துறைகள்.  10  மைல்
    நீளத்திற்கு  தஸ்ஸா  ஸ்வேத  மேதா  காட்,  கங்கையினால்  சுத்தப்படுத்தப்படுகிறது.
*  திருக்குறளில்  அத்தனை  தமிழ்  எழுத்துக்களும்  இடம்  பெற்று  விட்டன  என்று  சொல்லமுடியாது.  'ஔ'  என்ற  எழுத்து  ஒரு
   முறை  கூட  இடம்  பெறவில்லை.

No comments: