Friday, May 15, 2015

மௌனமே பதில்!

 மகான்  ஒருவரிடம்  மன்னன்,  " முட்டாளுடன்  பழக  நேரிடும்போது  என்ன  செய்ய  வேண்டும் ?"  என்று  கேட்டான்.
     மகான்  பதில்  கூறவில்லை.  மன்னன்  மீண்டும் , மீண்டும்  கேட்டும்,  மகான்  அமைதியாக  இருந்தார்.
     கோபதுடன்  கத்தினான்  மன்னன்.  உடனே  மகான்,  " மன்னா!  உங்கள்  கேள்விக்கு  தகுந்த  பதில்  அளித்துவிட்டேனே?  நீங்கள்தான்  புரிந்து  கொள்ளவில்லை!"  என்றார்.
     "நீங்கள்  பதிலேதும்  சொல்லவில்லையே?"  என்றார்  மன்னர்.
     " ஆம்,  அரசே!  அதுதான்  என்  பதில்.  முட்டாள்களுடன்  பழக  நேரிட்டால்,  மௌனம்  சாதிக்க  வேண்டும்!"  என்றார்  மகான்.
-- குமுதம்  பக்தி  ஸ்பெஷல்,  நவம்பர்  16 - 30,  2012. 

No comments: