Thursday, May 28, 2015

தெரியுமா உங்களுக்கு?

*  சூரியன்  ஒவ்வொரு  நாளும்  ஒரு  டிரில்லியன்  டன்  நீரை  ஆவியாக்குகிறது.
*  பண்டைய  சீனாவில்  நோயாளிகள்  குணமடைந்தால்  மட்டுமே  பணம்  வாங்கிக்கொள்வார்களாம்  மருத்துவர்கள்.
*  ஒரு  ஆலிவ்  மரம்  1,500  ஆண்டுகள்  வரை  உயிர்  வாழும்.
*  எறும்புகள்  மனிதர்களைப்  போலவே  தூங்கி  எழுந்தவுடன்  அன்றைய  வேலைகளை  செய்வதற்கு முன்  சோம்பல்  முறிக்கும்.
*  குழந்தை  பிறப்பதற்கு  ஏழு  வாரங்கள்  முன்பிருந்தே  கை  ரேகைகள்  உருவாகிவிடும்.
*  ஆஸ்திரியாதான்  முதன்முதலில்  தபால்  அட்டைகளை  பயன்படுத்திய  நாடு.
*  எந்த  உயிரையும்  அழிக்காமல்  கிடைக்கும்  ஒரே  இயற்கை  உணவு  பழங்கள்  மட்டும்தான்.
*  ஒரு  வண்னத்துப்பூச்சி  பறப்பதற்கு  அதன்  உடலின்  தட்பவெப்பம்  86  டிகிரிக்கும்  அதிகமாக  இருக்க  வேண்டும்.
*  இங்கிலாந்து  நாட்டில்  ஆங்கிலத்துக்கு  முன்பு  600  ஆண்டுகள்  அலுவல்  மொழியாக  பிரெஞ்சு  மொழி  இருந்தது.
--   தினமலர்,  சிறுவர் மலர்.  14.12.12.

No comments: