Friday, May 8, 2015

ஆதார் அட்டை

    " இந்திய  அரசாங்கம்  வழங்கும்  ' ஆதார்  அடையாள  அட்டை' யை  எப்படிப்  பெறுவது?"
      " மத்திய  அரசு  இந்தியக்  குடிமக்களுக்கு  வழங்கும்  அடையாள  அட்டை,  ஆதார்.  பெயர்,  முகவரி,  சுய  விவரக்  குறிப்புகள்,  கைரேகை  போன்ற  நுட்பமான  குறிப்புகளால்  பதிவுசெய்யப்படுவதால்  ஆதர்  அட்டை  எல்லாவிதமான  பயன்பாடுகளுக்கும்  செல்லத்தக்க  வகையில்  இருக்கும்.
        ஆதார்  அட்டை  பெற  தலைமை  அஞ்சல்  அலுவலகங்களில்  10  ரூபாய்  கொடுத்து  விண்ணப்பம்  பெற  வேண்டும்.  விண்ணப்பத்தைப்  பூர்த்திசெய்து  சிக்கல்  இல்லாத  முகவரிச்  சான்றிதழ்  இணைக்க  வேண்டும்.  உதாரணத்துக்கு  ரேஷன்  கார்டில்  சரியான  முகவரி  இருக்காது.  வாக்காளர்  அட்டை,  பாஸ்போர்ட்  நகல்  போன்ற  ஏதேனும்  ஒன்றின்  நகலை  இணைப்பது  நல்லது.  ஆதார்  அட்டை,  30  நாட்களில்  கிடைத்துவிடும்.
-- அனிதாபட்,  நிதி  ஆலோசகர்.
--  ஆனந்த விகடன்,  28 - 11 - 2012. 

No comments: