Thursday, May 7, 2015

பிரதட்சணம்.

 பிரதட்சணத்தை  ஏன்  இடமிருந்து  வலமாக  ( Clock  wise )  செய்கிறோம்?
போக்குவரத்து  இடையூறு  இல்லாமல்  இருக்கும்  என்பதற்காக  இந்த  வழக்கம்  ஏற்பட்டது  போல்  தோன்றலாம்.  அப்படியல்ல.  நாம்  பிரதட்சணம்  செய்யும்போது,  இறைவன்  எப்போதும்  நமக்கு  வலப்பக்கமாகவே  இருக்கிறான்.
     இந்தியாவில்  வலப்பக்கம்  என்பது  மங்கலத்தைக்  குறிப்பது!  ' வலது  காலை  எடுத்து  வைத்து  வா '  என்பர்.  எதையும்  கொடுக்கும்  போதும்,  வாங்கும்  போதும்  இடது  கையால்  செய்யாமல்  வலது  கையால்  கொடுப்பதும்,  வாங்குவதும்  மங்கலகரமானது  என்பதும்  நமது  நம்பிக்கை.
    ஆங்கிலத்தில்கூட  வலதுபக்கத்தை  Right  Side  -  அதாவது,  சரியான  பக்கம்  என்றே  குறிக்கின்றனர்.  எனவே  இறைவனது  கர்ப்ப  கிரகத்தை  சுற்றி  வருகையில்  நமக்கு  என்றும்  உறுதுணையாக,  இறைவன்  நமது  வலது  கையாக  இருக்கிறான்  என்ற  எண்ணம்  நமக்கு  தோன்றும்.
--  அனிதா , குமுதம்  பக்தி ஸ்பெஷல்,  நவம்பர்  16 - 30,  2012. 

No comments: